Posts

Showing posts from November, 2017

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்

Image
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமான ஏர் ஏசியா ரூ.99 குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் விமானத்தில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது பிக் சேல் ஸ்கீம் என்ற இத்திட்டத்தில் குறைந்த பட்ச அடிப்படை கட்டணமாக ரூ.99 வரி இல்லாமல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் 2018ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதல் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை இருக்கும் நாட்களில் உங்களது பயண தேதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.  இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி இந்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோர் தற்போது முந்திக்கொள்ளுங்கள்.

உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு

Image
சீனாவின் சான்யா சிட்டியில் நடைபெற்ற 2017-ம்ஆண்டின் உலக அழகி போட்டியில்  இந்தியாவை சேர்ந்த மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டார். 20 வயதாகும் இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவராவார். 17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மீண்டும் உலக அழகியாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா

Image
ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா அமெரிக்க பணிகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பதனடிப்படையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டவர்களை குறிப்பாக இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.H1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மாற்றியமைத்துள்ள நிலையில், முதுகலை படிப்பு படித்தவர்கள் மட்டுமே, இனி H1B விசா பெற விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை இந்தியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. H1B விசா கோரி, 2015ம் ஆண்டில் 2.75 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்க அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் நடப்பு ஆண்டில் H1B விசா கோரி, விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக சரிந்தது. முன்னணி நிறுவனங்களில் பெரும்பாலான பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.குறைந்தபட்ச சம்பளம் என பல்வேறு நெருக்கடிகளால் H1B விசா கோரும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர்...

சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம்

Image
சிமென்ட் விலை ரூ.8ஆயிரம் - அருணாச்சல் பிரதேசம் அருணாச்சல் பிரதேச மாநிலம் சங்லாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் விஜோய் நகர். இங்கு 1500 பேர் வசித்தாலும் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாத சூழ்நிலையில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால், மியாவோ என்ற நகரிலிருந்து 5 நாட்கள் நடந்து செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை ஹெலிகாப்டர் சேவை இருந்தாலும், அதுவும் வானிலை மாற்றம் காரணமாக சில நேரங்களில் இருக்காது. மாநில பொது சுகாதார துறை, மத்திய, மாநில அரசு சார்பில், இங்கு வீடுதோறும் கழிப்பறை கட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இங்கு, ஒரு மூட்டை சிமென்ட் ரூ.8 ஆயிரமாகவும், சிறிய கழிப்பறை அமைக்க நிலம் வழங்க ரூ.2 ஆயிரம் வசூலிக்கின்றனர். மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நகரத்திற்கு அனைத்து பொருட்களையும் சக்மாஸ் இன மக்கள் தான் கொண்டு செல்கின்றனர். அவர்கள் 150 கிலோ எடை கொண்ட ஒரு சிமென்ட் மூட்டைக்கு ரூ.8 ஆயிரம் விலை நிர்ணயம் செய்துள்ளனர். போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் மக்கள் இதை சுமந்து செல்வர் ஆதலால் இவ்வளவு விலை உயர்வு !

ஐ.பி.எஸ் மனைவி குழந்தையுடன் சிறைவாசம்

Image
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைசேர்ந்தவர், ஷபீர் கரிம், 29. இவர், 2014ல், அகில  இந்திய அளவில், 112வது இடத்தில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்ச்சி பெற்றார். எனினும், அவர், ஐ.பி.எஸ்., பணியை தேர்வு செய்து, 2016ல், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக, பயிற்சி பெற்று வந்தார். மனைவிக்காக மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயன்ற அவர், அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, பெண்கள் மேல்நிலை பள்ளியில், மெயின் தேர்வு எழுதியபோது, புளூ டூத் வழியாக காப்பி அடித்து சிக்கினார். இவரை, எழும்பூர் போலீசார், நேற்று முன் தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நேற்று, அவரது மனைவி, ஜாய்சி மற்றும் கூட்டாளி, ராம்பாபு ஆகியோரை கைது செய்தனர். ஐதராபாத்தில் இருந்து இன்று காலை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்ட ஜாய்சி, ஒன்றரை வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.