பள்ளிக்கு நீச்சல் அடித்துச் செல்லும் ஆசிரியர்!
கேரளா மலப்புரத்தில் உள்ள படிஞ்சதுமுரு முஸ்லிம் கீழ்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அப்துல் மாலிக்.பள்ளிக்கூடம் 24 கிமி தூரத்தில் உள்ளதால் இவர் தினமும் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு ஆற்றை கடந்து தான் செல்கிறார். ஒரு பிளாஸ்டிக் பையில் தனது துணியையும் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு நீச்சல் அடிப்பார் இவர். கரையை அடைந்தவுடன் தன் உடையை மாற்றிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் சென்றுவிடுவார். சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆன இவர், பல ஆண்டுகளில் ஆறு மிகவும் மாசடைந்துள்ளதை பற்றி கவலை தெரிவிக்கிறார். தன் மாணவர்களுடன் ஆறில் இறங்கி நீச்சல் அடித்தவாறே அதில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுகிறார். அவர் கூறியதாவது: பேருந்து பயணம் நீண்ட தூரம் இருப்பதால் ஆற்றை கடந்து வருவது சுலபாக உள்ளது.எந்தவித செலவுமின்றி, பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தையும் தவிர்க்க முடியும்.