Posts

நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை

Image
நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் வறுபடும் அரசியல் தலைவர்களில் ஒருவர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்திரராஜன். இது குறுத்து இவரிடம் ஒரு பேட்டியின் போது எழுப்பட்ட கேள்வியில் : ‛‛ நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன் இதனால் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜ., தலைவர் வலிமையான இருப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால் எனது. உயரம், தோற்றம், தலை முடி ஆகியவற்றை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறேன். எனது விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று தமிழிசை என்ற என் பெயரை ‛டுமிழிசை ' என மாற்றம் செய்தனர். அவர்களை பார்த்து நான் சிரிக்கிறேன். இதனால் எனக்கு கவலையில்லை'' என தெரிவித்துள்ளார்.

மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர்

Image
மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர் உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவன், அனுஜ் குமார். இந்த பள்ளியில் தினமும், மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும். சீருடை அழுக்காக இருந்ததால், மாணவன் அனுஜ், சமீபத்தில், சீருடை அணியாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, பள்ளிக்கு சென்றான். இதை பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவனின் பேன்ட்டை, கத்திரிக் கோலால் கத்தரித்தார். அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அதன்பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பினார்.கால்களில் ரத்தக் காயத்துடன் வந்த மகனை பார்த்து, அனுஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து, விசாரணைக்குப் பின் விடுவித்தனர். மாணவனின் கால்களில் ரத்தக் காயம் ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://themalar.com/index.php/component/k2/item/1048-2017-11-19-06-56...

சின்னப்பிள்ளை தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் : தமிழிசை

Image
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு கிடைத்தது குறித்து தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அப்படி இணைப்பு நடந்த போதே தெரிந்த விஷயம் தான் இவர்களுக்குத் தான் சின்னம் கிடைக்கும் என்பது. நிபந்தனைகளின் பேரில் தான் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுகவின் இந்த அணியை பலப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடத் தான் இந்த திட்டம். ஏனெனில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வாக்கு பெற முடியாது குறைவான வாக்குகளே அவர்களுக்கு கிடைக்கும் என்பது தெரியும் எனக் கூறியிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், இரட்டை இலைச்'சின்னம்'பாஜ., வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலை குறைப்பு !

Image
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்  http://themalar.com/index.php/component/k2/itemlist/category/5-2017-03-16-14-57-40 கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விலை உயரப்போகிறதாம் !

Image
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு -பிரசாத்தின் விலை இன்னும் சில நாட்களில் உயரப்போகிறது.இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. http://themalar.com/index.php/component/k2/item/1082-2017-11-27-10-54-57 இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவு ஆகிறது எனவும் சலுகை விலையில் லட்டு வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் இதுவரை லட்டு விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!!

Image
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!! http://themalar.com/index.php/component/k2/item/1083-2017-11-27-11-02-31 உலகின் இரண்டாவது போட்டியான 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த போட்டியில் மொத்தம் 92 நாட்டு கலந்து கொண்டன. லாஸ் வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி-லெய்க் நெல்-பீட்டர் என்ற 22 வயது அழகி வெற்றி பெற்றுள்ளார்.

காய்கறி விற்பனை செய்த கலெக்டர்

Image
காய்கறி விற்பனை செய்த கலெக்டர் http://themalar.com/index.php/component/k2/item/1087-2017-11-27-11-25-14 சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் கலெக்டராக பொறுப்பேற்ற ரோஹினி, அவ்வப்போது பொதுமக்களின் நலனுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாவட்ட ஆட்சியர் ரோஹினி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு குறித்தும் விற்பனைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள காய்கறிகள் விற்பனை செய்யும் மையத்திற்கு சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அருகேயிருந்த மீன்பண்ணைக்கு சென்று அங்கும் ஆய்வும் செய்தார். மாவட்ட கலெக்டர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.