Posts

Showing posts from July, 2017

மிகச்சிறிய விண்கலம் : அமெரிக்கா

Image
மிகச்சிறிய விண்கலம் : அமெரிக்கா உலகிலேயே சிறிய விண்கலத்தை கண்டுபிடித்து உள்ளனர்.3.5 செ.மீ*3.5 செ.மீ அளவுள்ள இந்த விண்கலத்தில் சென்சார்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது சூரிய சக்தியால் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பிரைட்ஸ் என்று பேரும் வைத்துள்ளனர்.இந்த விண்கலம், வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவல்களை அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது. Published in   அண்மைச் செய்திகள்

மரபணு மாற்றப்பட்ட கடுகு : சுப்ரீம் கோர்ட்

Image
மரபணு மாற்றப்பட்ட கடுகு : சுப்ரீம் கோர்ட் மரபணு மாற்றப்பட்ட கடுகை,  வர்த்தக ரீதியில் பயன்படுத்தும் வகையில்  அதை பயிரிட்டு பரிசோதிக்கும் முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேள்வி எழுப்பிய போது ஒரு மாதத்துக்குள், மத்திய அரசு இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று கூறினார் . பின் அதை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில்  கடுகு பயிரிடும் காலம் துவங்கும். அதற்கு முன்னதாகவே, மத்திய அரசு தன் கொள்கை குறித்து தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, மரபணு மாற்றப்பட்ட கடுகை, பயிரிட அனுமதி அளிப்பது என முடிவெடுத்தால், இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின், மரபணு மாற்றப்பட்ட கடுகு தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. Published in   அண்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு ரேசன் பொருட்கள் கிடையாது : உணவுத்துறை அமைச்சர் காமராஜர்

Image
தமிழகத்திற்கு ரேசன் பொருட்கள் கிடையாது : உணவுத்துறை அமைச்சர் காமராஜர் 2017 ம் ஆண்டுக்கான   உணவு பாதுகாப்பு புதிய விதிகள் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்தும் நபர் ஒருவர் இருக்கும் குடும்பத்தினருக்கு ,. தொழில் நிறுவன வரி செலுத்தும் குடும்பத்தினருக்கும்,ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட குடும்பத்தினர், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும்,5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாய குடும்பத்தினருக்கும், என மேலும் நான்கு சக்கர வாகனம் கொண்ட குடும்பத்தினருக்கும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளியை தலைவராக கொண்ட குடும்பம். ஆகியோருக்கு மட்டும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தமிழக மக்களுக்கு விளிக்கும் வகையில்  உணவுத்துறை அமைச்சர் காமராஜர் கூறுகையில்:   பொதுவிநியோக திட்டத்தில் நடைமுறையில் எள்ளளவும் மாற்றமில்லை என்றும் , அனைவர்க்கும் உணவு பொருட்கள் உண்டு என்றும் ,தமி...

ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு

Image
ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு   ஷாகித் காகன் மீது ரூ.2,200 கோடி ஊழல் வழக்கு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து,  நவாஸ் ஷெரீப்  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால்,  அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரீப்  பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பார்லிமென்ட் தேர்தலில் வென்ற பிறகே, அவரால் பிரதமராக பதவியேற்க முடியும். இந்த இடைப்பட்ட காலத்துக்கான பிரதமராக, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சருமான, ஷாகித் காகன் அப்பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இடைக்கால பிரதமராக இவர் மீது,  2,200 கோடி ரூபாய் ஊழல்  வழக்கு உள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. இதற்கான வழக்கு பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடந்து வருகிறது. Published in   அண்மைச் செய்திகள்

சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண்

Image
சாலையில் குழந்தை பெற்றெடுத்த பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  உள்ள  ஜெய்புரியா மருத்துவமனைக்கு  நேற்று பிரசவ வலி காரணமாக கர்ப்பிணி பெண் உறவினர்களோடு வந்தார். ஆனால் பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதோடு வலுக்கட்டாயமாக அந்த  கர்ப்பிணி பெண்ணை  வெளியேற்றினர். யாரும் உதவி செய்ய முன்வராததால் வெளியேற்றப்பட்ட  பெண் சாலையோர பகுதியிலே வலி தாங்க முடியாமல் குழந்தையை பெற்று எடுத்தார்.  இந்த சம்பவம்  ஜெய்ப்பூர் மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த பலரும் வேதனையோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுத்தனர்.சாலையில் கர்ப்பிணி குழந்தை பெற்றெடுத்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என ராஜஸ்தான் மாநில பெண்கள் கமிஷன் அறிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாக அதிகாரி கூறுகையில்: எங்களுடைய மருத்துவமனையில் பிரசவ அறையில் பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் சிறிது நேரம் தாமதம் ஆகும் என்று கூறியுள்ளார்கள் , அதற்கு அந்த கர்ப்பிணி பெண் ணுடன் வந்த உறவினர் அந்...

வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Image
வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை   வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில் : வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தும் கடந்த ஒரு மாதத்தில், இரண்டாவது முறையாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பயங்கர ஏவுகணை சோதனையை, நேற்று முன்தினம் நடத்தியுள்ளது.பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா நடந்துள்ள விதம், கடும் கண்டனத்துக்கு உரியது. தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு செய்ததாக தெரியவில்லை மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் செயல்பட்டது போல் உள்ளது.இத்தகைய சோதனைகளால் மேலும் வடகொரியா தனிமைப்படுத்தப்படும் , பொருளாதாரம் வலுவிழக்கும். இதனால், வடகொரிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

17 வயது மாணவனுக்கு கூகுளில் வேலை

Image
இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தில் பணியபுரிய வேண்டும் என்ற லட்சியமும் இருந்துள்ளது.இதனால் இவர் தன்னுடைய மாமா ரோஹித் சர்மாவிடம் கிராபிக் டிசைனிங் பயிற்சியை முறையாக கற்றுள்ளார். இதுபற்றி மாணவன் ஹர்ஷித் சர்மா கூறுகையில் : இதைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதால், பிரதமர் அலுவலகத்திலிருந்து  7,000 ரூபாய் பரிசுத் தொகை  வந்தது, அதன்பின் பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்கள் உருவாக்கினேன். அது போன்ற சமயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்கு ஹர்ஷித் அனுப்பியுள்ளார். இவரின் போஸ்டர்கள் கூகுள் நிறுவனத்திற்கு பிடித்துப்போகவே, கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிமாறு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் ஹர்ஷித் வரும் ஆகஸ்ட் மாதம் கலிபோர்னியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்றும்,...

பெண்களின் கூந்தல் துண்டிப்பு : மர்மம்

Image
பெண்களின் கூந்தல் துண்டிப்பு : மர்மம் ஹரியானா மாநிலத்தில் கிராமப்புற பகுதியில்  இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.அப்பகுதியில் வசிக்கும் பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதால், உள்ளூர் மக்கள், பீதியடைந்துள்ளனர்.  இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில் :  தனியாக வீட்டில் இருந்தபோது ஒரு வயதான முதியவர் எங்கள் வீட்டின் அருகில் பார்த்தேன், பார்த்த உடனே அவரை அங்கு இருந்து செல்லுமாறு சொன்னேன் , அங்கிருந்து சென்ற அந்த நபர் சிறிது நேரத்தில் மீண்டும் எங்கள் வீட்டிற்கு அருகில் வந்தார்,அதன் பின்,  திடீரென சுயநினைவை  இழந்தேன். கண்விழித்து பார்த்தபோது, என் கூந்தல் துண்டிக்ககப்பட்டிருந்தது. என கூறினார். இது பேய், பிசாசின் செயலாக இருக்குமோ என்ற அச்சத்தில், உள்ளூர் மக்கள் பயந்து உள்ளனர்.

நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி

Image
நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சி நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேரோட்ட நிகழ்ச்சிக்காக ஜூன் மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தின் தேரோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அம்மனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர் ஜாப் - அப்ப உங்களுக்கு தான் இந்த டிப்ஸ் !

Image
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என பல நோய்கள் நம்மை சூழ தொடங்குகிறது. இவற்றைச் எவ்வாறு சரிசெய்வது? இதற்காக சில அருமையான டிப்ஸ் *காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் (தியானம் ) செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் மனம் புத்துணர்ச்சி அடைந்ததை உணர்வதுடன், உங்களுடைய அன்றைய வேலை சிறப்பாக அமையும் *நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு துண்டினை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள். *முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். *ப...

சமூக பணிகளுக்கு சம்பளத்தை வழங்கும் டிரம்ப்

Image
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது  அதிபர் டொனால்டு டிரம்ப், உறுதியளித்தபடி, தனக்கு கிடைக்கும் சம்பளத்தை ஏழை மக்களுக்கும் , சமூக பணிகளுக்கு வழங்கி வருகிறார். மருத்துவ ஆராய்ச்சிக்கும் , கல்வி துறைக்கும் பயன்படும் விதத்தில் தன்னுடைய சம்பளம்  ரூ.67 லட்சத்தை வழங்கியுள்ளார்.

ஆக்சிஸ் வங்கி ப்ரீசார்ஜ் நிறுவனத்தை 385 கோடிக்கு வாங்கியது

Image
இந்திய  இணையதள வர்த்தகத்தில் மிக பெரிய நிறுவனமான  ப்ரீசார்ஜ் (FreeCharge)   நிறுவனம் இயங்கி வந்தது. பல இந்திய வணிக நிறுவனத்திற்கு உறுதுணையாக செல்லப்பட்டு வந்தது. தற்போது இதனுடைய மதிப்பு குறைந்து விட்டதால் இதனை விற்க  ஆக்சிஸ் வங்கி நிறுவனம்   385 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்நிறுவனம் ஆக்ஸிஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாகவே செயல்படும் தற்போது இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. #Themalar #E-Magazine #Tamil News #Like & Share www.themalar.com

நோக்கியா 6 ஸ்மார்ட்போன் : இந்தியா

Image
அமேசான் நிறுவனம் வழியாக  ஆகஸ்ட் 23ம் தேதி  முதல்  நோக்கியா 6 ஸ்மார்ட்போன்  விற்பனை செய்ய உள்ளது. ரூ.14,999 விலையில் அறிமுகமாகும் நோக்கியா பலரிடையே புதுவித வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இதனை சிறப்பிக்கும் வகையில் வோடபோன் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும்  ரூ.249 விலையில்  10ஜிபி டேடா சலுகையை 5 மாதங்களுக்கு கூடவே வழங்க உள்ளது. டூயல் சிம் வசதி கொண்ட நோக்கியா 6 கைரேகை சென்சார் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ், 3ஜிபி ரேம் என ஆண்ட்ராய்டு உலகத்தில் கால் பாதித்துள்ளது.

அழகு குறிப்புகள் - டிப்ஸ்!

Image
அழகு குறிப்புகள் - டிப்ஸ்! நமது அழகை பாதுகாக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே  போதும் இயற்கையான எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நாம் அழகினை பாதுகாத்து வரலாம்.நாம் உண்ணும் உணவே மருந்து - மருந்தே உணவு என்று கூறுவதில் தவறு இல்லை நாம் உண்ணும் உணவே இங்கு நமக்கு மருந்தாக பயன்பட போகின்றது. *வெந்தயம் - குளிர்ச்சியான பொருள் , எளிதில் கிடைக்கக்கூடியவை, உடல் சூடு , வயிற்று வலி ,குடற்புண் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது. இதனை நாம் அரைத்து கொண்டு சூடான நீரில் கலந்து மாவும் போல் வந்த பிறகு அதனுடன் 1/4 கப் தயிர் கலந்து தலையில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிய பிறகு அலசலாம். பொடுகு தொல்லை , அரிப்பு , முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு. *பால் - இது குளிர்ச்சியான பொருள் , பசும் பாலினை 1/2 கப் எடுத்து காய்ச்சிய பிறகு முகம் , உடல் ,கை , கால் என தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும் .இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும் , கருமை நீங்கும். *தக்காளி- தக்காளி விழுதினை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிய பிறகு கழுவினால் முகம் பளிச்சிடும். எந்த ஒரு...

குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி பலாத்காரம் :பஞ்சாயத்து!

Image
குடும்பத்தினர் முன்னிலையில் சிறுமி பலாத்காரம் :பஞ்சாயத்து! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ராஜ்பூர் கிராமத்தில்  அஷ்ஃபாக்  என்பவரின் தங்கையை வாடா என்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பஞ்சாயத்தில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த குற்றவாளிக்கு ஆதரவாக பஞ்சாயத்து  பெண்ணுடைய குடும்பத்தினர் முன்னிலையே பாலியல் பலாத்காரம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்த உத்தரவு பலரிடையே  அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதுபோல் பொய்யான வழக்குக்கு இதுபோல் தண்டனை அளித்தால் தான் இனிமேல்  நடைபெறாது என்று தவறான தீர்ப்பினை வழங்கிய பஞ்சாயத்து தலைவர் உள்பட   10 பேரை காவல் துறையினர்  கைது  செய்துள்ளனர்..

வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்!

Image
வாட்ஸ்ஆப்பிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்! உலகம் முழுவதும்  100 கோடிக்கும்  மேலான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்சப் நிறுவனம் புதுவிதமான பயன்பாட்டினை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. இதனை அறிந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை விட அதிக திறன் கொண்ட ஒரு ஆப்பை தயாரித்துள்ளது . இதற்கு  கைசாலா (Kaizala)  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் பல தொழில் முனைவோர்கள் , அரசு ஊழியர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆப்ஸ் தற்போது  ஆன்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ்  மொபைல்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: * இதில் குரூப் ஆரம்பிக்கப்பட்டால் 1 லட்சத்துக்கும் மேலான எத்தனை நபர்களை வேண்டுமானாலும் இணைக்கலாம். * ஒரே சமயத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டவரிடம் வீடியோ கால் பேசலாம். * மெசேஜ் , வாய்ஸ் கால் , செய்யவும் முடியும். * இணையதள வணிகமும் செய்ய முடியும். *ஒரே நேரத்தில் லட்ச நபர்களுக்கும் செய்திகளை அனுப்ப முடியும். தொழில்முனைவோருக்கும் , அரசு ஊழியருக்கு சிறந்த ஒரு ஆப்பாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

சிறுமி கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு : சுப்ரீம் கோர்ட்

Image
சிறுமி கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு : சுப்ரீம் கோர்ட் புதுடெல்லி சண்டிகரை சேர்ந்த  10 வயது சிறுமி  சில நாட்களாக தொடர்ந்து  வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூற , பின் மருத்துவ பரிசோதனையில் 10 வயது கொண்ட சிறுமி  கர்ப்பிணியாக  இருந்தது தெரியவந்தது. இது பெற்றோர் மற்றும் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த  சிறுமியிடம் கேட்டபோதுதான் தெரிந்தது , அவரது  நெருங்கிய உறவினரே தொடர்ச்சியாக சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிறுமியின் கருவை அழிக்க சண்டிகர் மாவட்ட கோர்ட்டில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கக்கோரி மனு தாக்கல் செய்தனர்  26 வார கருவாக உள்ளதால்  அனுமதி வழங்கவில்லை, இதனை அடுத்து அந்த பெற்றோர்  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர் ஆனால் அங்கு விசாரித்த நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்

Image
ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார்   ஷாபாஸ் பாகிஸ்தான் பிரதமராகிறார் வரி ஏய்ப்பு செய்ததாக நவாஷ் ஷெரீப்பை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யவும் நவாஸ் ஷெரீப்பைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பாக்கிஸ்தான்  பிரதமர் நவாஷ் ஷெரீப்  தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய பிரதமராக நவாஷ் ஷெரீப் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.

தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை

Image
தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை  தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்தனர் ,அவர்கள்  யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். தமிழக அரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைள் இன்று  இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசு  விடுதலை செய்துள்ளது.

ட்விட்டரில் மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல்

Image
ட்விட்டரில் மகளுக்கு வாழ்த்து சொன்ன கமல் கமலின் இரண்டாவது மகள் அக்ஷ்ரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறப்போவதாக வதந்தி கிளம்பியது அதனை அப்போது மறுத்துள்ளார். இதற்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்த மதத்திற்கு மாறிவிட்டாயாமே ! அப்படி மாறியிருந்தால் எனது வாழ்த்துக்கள் ,என்று குறிப்பிடுள்ளார். #Themalar #E-Magazine #Tamil News #Like & Share www.themalar.com

அன்புச்சுவர்

Image
அன்புச்சுவர் தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் "அன்புச்சுவர்" திட்டத்தை  நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.சந்தீப் நந்தூரி அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.  பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் இதர பயனுள்ள பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் விதமாக இத்திட்டம் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பாக துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 14வது ஜனாதிபதி : ராம்நாத் கோவிந்த்

Image
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தேர்ந்துதெடுக்கப்பட்ட  ராம்நாத் கோவிந்த்   குதிரைப்படை வீரர்களால் அழைத்து வரப்பட்டு  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் முன்னிலையில் பதவி ஏற்றார். இந்த  விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.

குஜராத்திற்கு ரூ. 500 கோடி நிதி:மோடி

Image
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் பதிப்பிற்குள்ளாகியுள்ளன.வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். இதனை முன்னிட்டு வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட பகுதியை ஹெலிகாப்டர் மூலம்  பிரதமர் மோடிபார்த்தார். பின்னர் வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு சார்பில்  ரூ.500 கோடிக்கு  மேல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

எச் - 1 பி விசா : அமெரிக்கா

Image
அமெரிக்காவில் பணிபுரிய வெளி நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழங்கப்படும், 'எச் - 1பி' விசாக்களை வழங்குவதில் டொனால்டு டிரம்ப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பல தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  இந்நிலையில் விசா வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை உணர்ந்து தொழிலார்களுக்கு விசா வழங்குவதை துரிதப்படுத்தி உள்ளது.

துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ்

Image
துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ்   துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் : ரிலையன்ஸ் குஜராத்திலுள்ள பிபவாவ் துறைமுகத்தில் இந்திய கடற்படைக்காக  இரண்டு கப்பல்களை ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனம்  வழங்கியுள்ளது. இந்த இரண்டு கப்பல்களுக்கு  ஷாசி, ஸ்ருதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை கொண்ட இந்த கப்பலின் வேலை  ரோந்து பணியினை மேற்கொள்வது மட்டும் தான் இவ்விழாவில் துணை கப்பற்படைத் தலைவர் கிரிஷ் லுத்தரா கலந்து கொண்டார்.

பாகிஸ்தானிற்கு வெங்கையா எச்சரிக்கை

Image
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  வெங்கையா நாயுடு  கூறியது: காஷ்மீர் முதல் கன்னயாகுமரி வரை அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர்.இந்தியா அமைதியை விரும்பும் நாடு.காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரின் ஒரு அடி இடத்தை கூட வேறு யாரையும் எடுத்து செல்ல விட மாட்டோம்.  பயங்கரவாதத்திற்கு உதவுவது மட்டுமில்லாமல் ஆதரிப்பதும்   பெரிய தவறு.கடந்த  1971ல் என்ன நடந்தது என்பதை  அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கடல்நீர் மட்டம் உயரும் அபாயம் : அண்டார்டிக்கா

Image
அண்டார்டிகாவில் பனிப்பாறை ஒன்று தனியாக பிரிந்து உள்ளது. இது  ஒரு லட்சம் கோடி டன் எடை  கொண்ட பனிப்பாறை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பனிப்பாறை விலகி வருவதாக செயற்கைகோளில் தெரியவந்துள்ளது. இந்த் பிளவு பட்ட பனிப்பாறை தற்போது அண்டார்டிக்கா கடலில் ஒன்றரை கி.மீ தூரம் கடந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பனிப்பாறைகள் உருகுவதற்கு முக்கிய காரணம்  உலக வெப்பமயதால்  என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த பனிப்பாறை விலகி உள்ளதால் கடல்நீர்மட்டம் உயரும் என  ஆராய்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வெந்தயத்தின் மருத்துவச் சிறப்பு

Image
வெந்தயத்தின் மருத்துவச் சிறப்பு இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து,  200 மி.லி. அளவு  தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்.பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளும். மோரில் வெந்தயத்தை  ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம்  தலையில் தடவி  குளித்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்சனை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது.

சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

Image
சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.கடந்த 14-ம் தேதி துர்க்கை அம்மன் ஆலயத்தில்  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சுவிஸின் பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துக் கொண்டனர். #Themalar #E-magazine #Tamil News www.themalar.com

சவுதி அரேபியா-விற்கு வேலைக்கு செல்பவர்கள் :விதிமுறை

Image
சவுதி அரேபியா-விற்கு வேலைக்கு செல்பவர்கள் :விதிமுறை சவுதி அரேபியாவிற்கு செல்வதற்கு  முன் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. *கறுப்பு கயிறு, மோதிரம் அணிவது மற்றும் மாந்திரிகம் ,சூனியம் போன்றவை கடைப்பிடிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். *போதை பொருட்கள், பான் மசாலா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. *லேப் டாப் மற்றும் தொலைபேசியில் ஆபாச படங்கள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு செல்ல வேண்டாம். இதை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை. *வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜென்ட்களுக்கு சேவை கட்டணமாக, 20 ஆயிரத்திற்கு மேல் வசூலிக்க கூடாது என சவுதி அரசு கூறியுள்ளது.  *சவுதி வேலை வாய்ப்பு அமைச்சகம் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இலவச மொபைல் போன் சிம் கார்டு வழங்குகிறது.  போன்ற விதிமுறைகளை இனிவரும் காலங்களில் கடைபிடிப்பது நன்று. #Themalar #E-magazine #Tamil News www.themalar.com

இந்தியாவிற்கு மிக் - 35 ரக போர் விமானம் : ரஷ்யா

Image
இந்தியா கடந்த  50 ஆண்டுகளாக ரஷ்யாவை சேர்ந்த மிக் ரக போர் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. தற்போது அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன்  மிக் - 35 ரக   விமானங்களை உற்பத்தி செய்த இந்நிறுவனம் இந்தியாவுக்கு விற்க தயாராக உள்ளதாக கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் இல்யா டரசென்கோ கூறுகையில் : உலக நாடுகளில் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட ஒரே போர் விமானம் இதுதான். இந்தியாவிற்கு விற்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான டெண்டரை பெற இந்திய விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த விமானங்களை பெற இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. #Themalar #E-magazine #Tamil News www.themalar.com

1000 டாலருக்கு விற்கப்படும் உக்ரைன் இளம் பெண்கள்

Image
உக்ரைன் நாட்டில்,  18 - 35 வயதுக்குட்பட்ட  இளம் பெண்களை கடத்தி இஸ்ரேலில் ஹைபா நகரில்  500 முதல் 1000  டாலருக்கு விற்று விடுகிறார்கள். இப்படி விற்கப்படும் இளம்பெண்கள் விபச்சார விடுதிகளில் பாலியல் அடிமைகளாக வேலை செய்ய வேண்டும். இந்நிலையில் உக்ரைனின்  நகரின் , 8 இடங்களில்  திடீர் சோதனை  ஈடுபட்ட அதிகாரிகள் பல  பகுதியிலிருந்து  பாலியல் அடிமைகளாக  இஸ்ரேலுக்கு கடத்தப்பட இருந்த  6 உக்ரைன் இளம் பெண்களை மீட்டுள்ளனர். மேலும், உக்ரைன் பெண்களைக் கடத்தி இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்ற வந்த கும்பலை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். #Themalar #E-magazine #Tamil News www.themalar.com

மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு

Image
மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு   மகாராஷ்டிரா மாநிலத்தில் நீதிபதியின் சர்ச்சை பேச்சு மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்  தூய்மை இந்தியா திட்டம்  குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  பீகார் மாவட்ட நீதிபதி கண்வால் தனுஜ்   தூய்மை இந்தியா குறித்து கிராமத்து மக்கள் முன்னிலையில் பேசினார். அவர் பேசியது.  ஒரு கழிப்பிடம் கட்ட  அதிகபட்சம்  ரூபாய் 12,000  ஆகும். எதற்கு எதற்கோ தேவையில்லாத செலவு செய்கிறீர்கள் உருப்படியான ஒரு செலவு செய்ய மனம் வரவில்லையா.உங்களது மனைவின் கவுரவம் , மானத்தை விடவா உங்களுக்கு  12,000 ரூபாய்  பெரிது ? உங்களால் கழிப்பிடம் கட்ட முடியவில்லை என்றால்  உங்கள் மனைவியை விற்று விடுங்கள்  என்று ஆவேசத்துடன் பேசினார்.நீதிபதியின் அப்பேச்சு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது #Themalar #E-magazine #Tamil News www.themalar.com

'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை :மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம்

Image
'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை   'டிவி' சேனல்களுக்கு எச்சரிக்கை ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருந்துகளின் விளம்பரங்கள் அதிகளவில்  டிவி சேனல்களில் ஒலிபரப்பாகி  வருகிறது இதில் பாதிக்கு மேல போலியாக தான் உள்ளது இத்தகைய விளம்பரங்கள், மக்களை ஏமாற்றும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. போலியான மருந்துகளை மக்களிடையே விற்கும் நோக்கத்தோடு பல போலி நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எல்லா டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ... லைசென்ஸ்கள் பெற்றுள்ள மருந்துப் பொருட்கள்  குறித்த விளம்பரங்களை மட்டுமே, 'டிவி' சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும். தவறான விளம்பரங்களை ஒளிபரப்பும்  சேனல்கள் மீது, தக்க நடவடிக்கை  எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #Themalar #E-magazine #Tamil News www.themalar.com