பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனை வழங்கிய பெண்கள்


Women who punished a sexually abusive person பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனை வழங்கிய பெண்கள்
ஜார்க்கண்ட் மாநிலம் ரும்காரா மாவட்டத்திற்கு உட்பட்ட ராம்கர்க் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, உறவினர் திருமணத்திற்காக குதுமித் பகுதிக்கு பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை மிதுன் அன்சாடா என்பவன், அருகிலுள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்று, கொடூரமாக கற்பழித்து கொலை செய்துள்ளான். தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள், மிதுன் அன்சாடாவை கண்டுபிடித்து ராம்கர்க் கிராமத்திற்கு இழுத்து வந்துள்ளனர்.
பின்னர் பொதுவெளியில் அவனை கட்டிவைத்து அடித்தனர். அப்போது ஆவேசம் கொண்ட பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை கொடூரமாக தாக்கியதில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞனை பெண்களே அடித்து கொன்ற சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்