'நதிகளை மீட்போம்' , ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்
'நதிகளை மீட்போம்' , ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் 'நதிகளை மீட்போம்' அமைப்பினர், நதிகளை மீட்பதின் அவசியம் குழித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள நதிகளை மீட்டு, மீண்டும் அவற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடவும், அதனால், அப்பகுதிகளில் உள்ள நாகரிகம், பண்பாடு கலாசாரம் காப்பாற்றும் நோக்கத்தில் இணைந்த தன்னார்வலர்கள், 'நதிகளை மீட்போம்' என்ற, இயக்கத்தை துவக்கி உள்ளனர். அவ்வியக்கத்தில் உள்ள, மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பெரு நிறுவன பணியாளர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஆர்வலர்கள் உள்ளனர். அவர்கள், இன்று காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரை, தமிழகம் முழுவதும், முக்கிய சாலைகளில் கூடி, புதுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.நதிகளை மீட்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தன்னார்வலர்களும் கலந்து கொள்ளலாம். அதற்கான படத்தை, rallyforriver.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், 80009 80009 என்ற எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொட...