ரூ.1.29 கோடி கடத்த முயற்சி : இருவர் கைது

ரூ.1.29 கோடி கடத்த முயற்சி : இருவர் கைது

இந்தியா புனே விமான நிலையத்தில் துபாய் செல்வதற்காக வந்த நிஷாந்த் ஒய் என்பவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அவர்கள் நடத்திய சோதனையில் ஒரு 'ஹாட் பாக்சில்' சுடச்சுட உப்புமா இருந்தது. ஆனால், வழக்கமான எடையை விட கூடுதலாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சோதித்தனர். அப்போது அதில் 
கறுப்பு நிற பாலிதீன் கவரில், 86,000 அமெரிக்க டாலர், 15,000 யூரோ கரன்சிகள் இருந்தன. தொடர்ந்து, எச்.ரங்க்லானி என்ற பெண்ணும் அதேபோல் 86,200 அமெரிக்க டாலர், 15,000 யுரோ கரன்சிகள் கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு , இருவரையும் கைது செய்து ,மொத்த மதிப்பு, 1.29 கோடி ரூபாய். பிடிபட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு ஏதும் உள்ளதா என சுங்கவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்