வடகொரியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
வடகொரியா எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
அமெரிக்காவை மிரட்டும் வகையில் தினங்களுக்கு முன்பு அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்தது. இதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன , அதன் வகையில் அமெரிக்கா கடுமையாக எதிர்த்து , இதுபோல் சோதனை செய்வது தவறானதாகும் என்று , ஐநா வின் பொருளாதார தடைகளையும் மீறி சோதனைகளை தொடர்ந்து நடத்தி வந்தது. தற்போது ஜப்பானுக்கு அருகில் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவை தாக்க 4 ஏவுகணைகள் தயாராக உள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் குவாம் தீவு வடகொரியாவில் இருந்து 3356 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 541 சதுர பரப்பளவைக்கொண்ட இத்தீவில் 1 லட்சத்து 63 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இதுதொடர்பாக அந்த நாட்டு அரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியா குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்காக ஹவாசாங் என்ற வகையை சேர்ந்த நான்கு ஏவுகணைகளை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இன்னும் 4 நாட்களில் தயாராகிவிடும் என்றும் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ராணுவ தளபதி கிம் ராக் கயாம் தகவலை கூறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment