Posts

Showing posts from December, 2017

நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை

Image
நெட்டிசன்களால் டுமிழிசை என்று அழைக்கப்படும் தமிழிசை சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் வறுபடும் அரசியல் தலைவர்களில் ஒருவர் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்திரராஜன். இது குறுத்து இவரிடம் ஒரு பேட்டியின் போது எழுப்பட்ட கேள்வியில் : ‛‛ நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன் இதனால் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. பா.ஜ., தலைவர் வலிமையான இருப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால் எனது. உயரம், தோற்றம், தலை முடி ஆகியவற்றை வைத்து விமர்சிக்கப்பட்டு வருகிறேன். எனது விக்கிபீடியா பக்கத்திற்கு சென்று தமிழிசை என்ற என் பெயரை ‛டுமிழிசை ' என மாற்றம் செய்தனர். அவர்களை பார்த்து நான் சிரிக்கிறேன். இதனால் எனக்கு கவலையில்லை'' என தெரிவித்துள்ளார்.

மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர்

Image
மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர் உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவன், அனுஜ் குமார். இந்த பள்ளியில் தினமும், மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும். சீருடை அழுக்காக இருந்ததால், மாணவன் அனுஜ், சமீபத்தில், சீருடை அணியாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, பள்ளிக்கு சென்றான். இதை பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவனின் பேன்ட்டை, கத்திரிக் கோலால் கத்தரித்தார். அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அதன்பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பினார்.கால்களில் ரத்தக் காயத்துடன் வந்த மகனை பார்த்து, அனுஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து, விசாரணைக்குப் பின் விடுவித்தனர். மாணவனின் கால்களில் ரத்தக் காயம் ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://themalar.com/index.php/component/k2/item/1048-2017-11-19-06-56...

சின்னப்பிள்ளை தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் : தமிழிசை

Image
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகளுக்கு கிடைத்தது குறித்து தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆலோசனையின் பேரிலேயே ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்துள்ளனர். அப்படி இணைப்பு நடந்த போதே தெரிந்த விஷயம் தான் இவர்களுக்குத் தான் சின்னம் கிடைக்கும் என்பது. நிபந்தனைகளின் பேரில் தான் இவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். அதிமுகவின் இந்த அணியை பலப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடத் தான் இந்த திட்டம். ஏனெனில் பாஜகவால் தனித்து போட்டியிட்டு வாக்கு பெற முடியாது குறைவான வாக்குகளே அவர்களுக்கு கிடைக்கும் என்பது தெரியும் எனக் கூறியிருந்தார். இதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், இரட்டை இலைச்'சின்னம்'பாஜ., வாங்கிக் கொடுத்தது என்று 'சின்னப்'பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர் என குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளின் விலை குறைப்பு !

Image
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்  http://themalar.com/index.php/component/k2/itemlist/category/5-2017-03-16-14-57-40 கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விலை உயரப்போகிறதாம் !

Image
திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு -பிரசாத்தின் விலை இன்னும் சில நாட்களில் உயரப்போகிறது.இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. http://themalar.com/index.php/component/k2/item/1082-2017-11-27-10-54-57 இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவு ஆகிறது எனவும் சலுகை விலையில் லட்டு வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் இதுவரை லட்டு விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!!

Image
மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற தென் ஆப்ரிக்க அழகி!! http://themalar.com/index.php/component/k2/item/1083-2017-11-27-11-02-31 உலகின் இரண்டாவது போட்டியான 66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இந்த போட்டியில் மொத்தம் 92 நாட்டு கலந்து கொண்டன. லாஸ் வேகாஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த டெமி-லெய்க் நெல்-பீட்டர் என்ற 22 வயது அழகி வெற்றி பெற்றுள்ளார்.

காய்கறி விற்பனை செய்த கலெக்டர்

Image
காய்கறி விற்பனை செய்த கலெக்டர் http://themalar.com/index.php/component/k2/item/1087-2017-11-27-11-25-14 சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் கலெக்டராக பொறுப்பேற்ற ரோஹினி, அவ்வப்போது பொதுமக்களின் நலனுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாவட்ட ஆட்சியர் ரோஹினி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு குறித்தும் விற்பனைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள காய்கறிகள் விற்பனை செய்யும் மையத்திற்கு சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அருகேயிருந்த மீன்பண்ணைக்கு சென்று அங்கும் ஆய்வும் செய்தார். மாவட்ட கலெக்டர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Paytm வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்!!

Image
Paytm வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம்!! பேடிஎம் மூலம் வாங்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஓராண்டுக்குள் எதிர்பாராதவிதமாக சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும். மேலும் ஸ்மார்ட்போன் திருட்டு, டிஸ்ப்ளே சேதம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்கள் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்பிள், சியோமி, மோட்டோரோலா, விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது.  காப்பீடு திட்டத்தின் படி ஸ்மார்ட்போனின் மதிப்பில் இருந்து 5 சதவீதத்தை பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். குறிப்பாக பேடிஎம் மால் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.

தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த அமைச்சர்

Image
தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்த அமைச்சர் http://themalar.com/  இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் இன்று நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் எங் ஹென், மேற்கு வங்கத்தில் உள்ள கலைகொண்டா விமானப்படை தளத்துக்கு சென்று நேற்று பார்வையிட்டார். பின் இந்திய தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தில் பயணித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவரது பயணம் நீடித்தது. பின் ‛தேஜாஸ்' குறித்து அவர் தெரிவிக்கையில், ‛தேஜாஸ் விமானத்தில் பயணிப்பது போர் விமானத்தில் பயணிப்பது போல் தெரியவில்லை. காரில் பயணிப்பது போல் இலகுவாக உள்ளது. இதனை சிங்கப்பூருக்காக வாங்க விரும்புகிறோம்' என்றார்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம்

Image
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மணல் குவாரிகள் இனி தமிழகத்தில் கிடையாது -ஐகோர்ட்

Image
மணல் குவாரிகள் இனி தமிழகத்தில் கிடையாது -ஐகோர்ட் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது. தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழுதைகளை சிறையில் அடைத்த சம்பவம்

Image
உத்தரபிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் உள்ள ரூ.60  ஆயிரம் மதிப்புள்ள அழகுக்காக தாவரங்கள், மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24ஆம் தேதி வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளன. மூத்த சிறை அதிகாரிகளின் உத்தரவின் போரில் கழுதைகளை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர் அவைகளை சிறையில் அடைத்தனர். கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த அதன் உரிமையாளர் உள்ளூர் பாஜக தலைவர் ஆதரவுடன் சிறை வளாக அதிகாரியை சந்தித்து பேசிய பின்னரே கழுதைகள் விடுவிக்கப்பட்டது. அதுவும் நான்கு நாட்கள் கழித்துதான் கழுதைகள் விடுவிக்கப்பட்டுள்ளது. http://themalar.com/index.php/component/k2/item/1095-2017-11-29-11-20-34

அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினீர்களா!

Image
அரசு ஊழியர்கள், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினீர்களா! ராஜஸ்தானில், கடந்த ஐந்து ஆண்டுகளில், அரசு துறைகளில் பணியில் சேர்ந்த ஊழியர்கள், தங்கள் திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினரா, இல்லையா என்பது குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில், ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்ட தேதி, துறை ஆகியவற்றுடன், திருமணமானவர்கள் என்றால், திருமணத்தின் போது வரதட்சணை வாங்கினாரா, இல்லையா என்பதை குறிப்பிட்டு, கையெழுத்திட்டு, பெற்றோர், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோரின் கையெழுத்துடன் வழங்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில், மனைவி அல்லது அவரது பெற்றோரிடம் வரதட்சணை கேட்டதாக புகார்கள் வந்தாலோ அல்லது நீதிமன்றத்தை அணுகினாலோ, அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு

Image
டில்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு டில்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டில்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன நிகழ்ச்சியி்ல கலந்து கொள்கிறார். தொடர்ந்து ஒபாமா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டவுன் ஹால் கூட்டத்தில் உரையாற்றுவதுடன், நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள இளைஞர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

பன்னாட்டு பேச்சுப்போட்டியில் இந்தியா இரண்டாம் நிலை வெற்றி

Image
இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்பாரதன் வெற்றி ! பன்னாட்டு மாணவர்களுக்கான ”பேசு தமிழா பேசு” போட்டி இலங்கையில் அண்மையில் நடைபெற்றது. மலேசியாவில் இயங்கிவரும் ‘ஆஸ்ட்ரோ வானவில்’ மற்றும் ‘வணக்கம் மலேசியா’ இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேர்வுசெய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக மொத்தம் மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் திருவாரூரில் இயங்கிவரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் த.க.தமிழ்பாரதனும் ஒருவர். முதல் சுற்று, இரண்டாம் சுற்று, இறுதிச்சுற்று என மொத்தம் மூன்று சுற்றுகளாக இந்தப் பன்னாட்டுப் போட்டி நடைபெற்றது. முதலிரண்டு சுற்றுகளில் வென்ற நான்கு மாணவர்கள் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டனர். இந்தியாவின் சார்பில் பங்கு கொண்ட மாணவர் தமிழ்பாரதன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் இந்தியா, இலங்கை, மலேசியா(2) நாடுகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இறுதிச்சுற்றின் நிறைவில் இந்தியா சார்பில் பங்குகொண்ட...

எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல்

Image
எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல் குஜராத் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்., பா.ஜ. வும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அமரேலியில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.அதில் ராகுல் இந்து அல்லாதவர் என பதிவிடப்பட்டிருந்தது. இது பா.ஜ.வின் வேலை என காங். குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்பேசியது, சோம்நாத் கோயிலுக்கு சென்ற நான் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்து மட்டுமே போட்டேன். ஆனால் பா.ஜ.வினர் தான் மத பிரச்னையை குறிப்பிட்டு விஷமம் செய்துள்ளனர். மதத்தின் மீதான நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். நாங்கள் மதத்தை வைத்து வியாபாரம் செய்யவில்லை. நான் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள் தான் என பேசினார்.