2018 வரை மட்டுமே ரேஷனில் அரிசி : ராம்விலாஸ்பஸ்வான்.
இந்தியா புதுடெல்லி லோக்சபா கூட்டத்தின் போது அமைச்சர்களிடையே பேசிய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது : தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, உணவு தானியங்களின் விலைகளை மாற்றலாம் அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். இந்த மானியத்தை 2018 ஆம் ஆண்டு வரை கடைபிடிக்க உள்ளோம். அதன் பிறகு மாற வாய்ப்பு உண்டு. மேலும் நாட்டில் உணவு பொருட்களை சேமிக்கும் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறோம். உண்வு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் கிடோன்கள் அமைக்க உள்ளோம் என்று கூறினார்.

Comments
Post a Comment