மூக்கில் கரும்புள்ளியா ? இதோ டிப்ஸ்
மூக்கில் கரும்புள்ளியா ? இதோ டிப்ஸ்
முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக காணப்படும் போது மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றிவிடுகின்றது. வெளியே செல்லும் போது வாகனப்புகை காரணமாகவும் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடுகின்றது. இது பெரும்பாலும் ஆண்களுக்கு தான் வருகிறது. மூக்கிலுள்ள கரும்புள்ளிகளை எளிய வகையில் நீக்குவதற்கு வீட்டிலே இயற்கை யான பொருட்களை பயன்படுத்தலாம்.
உப்பு மற்றும் கடலை மாவு: 1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தக்காளி: தக்காளியை நன்கு பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளியை நீக்கிவிடலாம். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
எலுமிச்சை மற்றும் தயிர் : இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
பட்டை மற்றும் தேன்: 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடு நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதனால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறையும்.

Comments
Post a Comment