அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் தீர்மானம் :இந்தியா- பாகிஸ்தான் புறக்கணிப்பு
#இந்தியா- பாகிஸ்தான் புறக்கணிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானில் அணுகுண்டுகள் வீசப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரசாரம்நடந்து வருகிறது. அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை, ஐ.நா., மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்கும் தீர்மானம், ஐ.நா., சபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானம் மீது, நேற்று முதல்கட்ட ஓட்டெடுப்பு நடந்தது.அதற்கு ஆதரவாக, 122 நாடுகள் ஓட்டளித்தன.இந்தியா,பாகிஸ்தான்,அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை

Comments
Post a Comment