குஜராத்திற்கு ரூ. 500 கோடி நிதி:மோடி
குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் பதிப்பிற்குள்ளாகியுள்ளன.வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளனர். இதனை முன்னிட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடிபார்த்தார். பின்னர் வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடிக்கு மேல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Comments
Post a Comment