விஷமுள்ள பாம்புகளிடம் அன்பாக பழகி வரும் பெண்


கொடிய விஷமுள்ள பாம்புகளை தனதுநண்பர்களாக மாற்றி, அவைகளுடன் அன்பாக பழகி வருகிறார் கார்க்கி விஜயராகவன் என்ற பெண். மனிதனின் அறியாமைதான் பாம்பு களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கின்றன என்று நம்பும் அவர் அதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். காடுகளில் இருந்து ஊர்களுக்குள் நுழையும் பாம்புகளை பாதுகாத்து, அவைகளுக்கு நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுத்துஅவற்றை மீண்டும் காட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கிறார். கடந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட 2000 பாம்புகள் வரை இவரால் காப்பாற்றப் பட்டிருக்கின்றன.
சென்னையில் வங்கியொன்றில் வேலை பார்த்த சமயங்களில் தனது மதிய உணவுப் பொழுதினை முதலைப் பண்ணையில் இருக்கும் பாம்புகளிடையேதான் செலவிடுவாராம். இப்படித் துவங்கிய பாம்புகளின் மீதான அவரது ஈடுபாடு என்னையும் தொற்றிக் கொண்டது. சின்ன வயதிலிருந்தே பாம்புகளுடன் எனக்கு நட்புணர்வு ஏற்பட்டது. இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் நான்கு வகைப் பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை. மற்றவையெல்லாம் எந்த ஆபத்தும் விளைவிக்காது. பாம்புகளைக் காப்பாற்ற போகுமிடங்களில் எல்லாம் நான் இது குறித்து மக்களிடம் விளக்க முயற்சிக்கிறேன். பள்ளிக் காலத்தில் உடன் படிக்கும் மாணவர்கள் பலரும் என்னை கிண்டலடிப்பதும், பாம்பு போன்ற சீறல் ஒலியெழுப்பி என்னைக் கேலி செய்வதும் சகஜமானது.
என் வருத்தங்களை என் தாயிடம் பகிர்ந்து கொண்டபோது இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால் நான் சோர்வடையக் கூடாது என்று எனக்கு சொல்லித் தந்தார். தற்போது பட்டப் படிப்பை முடித்துவிட்டு‘மைவெட்ஸ்' (MyVetsCharitable Foundation) எனும் வனவிலங்குகளை காப்பாற்றும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன் என்கிறார் /

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்