பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை
இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத 5.7 சதவித சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார தேக்க நிலை குறித்தும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அருண் ஜெட்லி தெரிவித்ததாவது: பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பிரதமர் மோடியுடன் கலந்தாலோசித்து, பொருளாதாரத்தை சீர்திருத்தம் செய்ய தேவையான அதிரடி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

Comments
Post a Comment