கணக்கில் வராத பணம் : எஸ்.எம்.கிருஷ்ணா மருமகன்
கர்நாடக முன்னாள் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழிலதிபருமான சித்தார்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் (செப்.,24) சோதனை நடைபெற்றது.
மொத்தம் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.650 கோடிக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சித்தார்த்திற்கு சொந்தமான ஐடி நிறுவனம், சுற்றுலா நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment