இளைஞர்களின் ரோல்மாடல் மோடி: சத்குரு

ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது :நான் மாணவர்களிடையே பேசும்போது, அவர்களின் மனஓட்டத்தினை 

அறிகிறேன். அவர்களின் மனஓட்டம், சினிமா என்ற மாயையிலிருந்து விலகி யதார்த்தம் என்ற நிஜ வாழ்க்கையை நோக்கி நகர்வதை அறிந்தேன். இது நிச்சயம் வரவேற்க கூடிய நிகழ்வு தான். தமிழக மக்கள் எப்போதும் புத்திசாலிகள், ஆனால் அரசியல் என்று வரும்போது அவர்களது அணுகுமுறை எப்போதும் சற்று வித்தியாசமே இருந்து வருகிறது. திரை நட்த்திரங்களையே அவர்கள் தங்களது வழிகாட்டிகளாக எடுத்து கொள்கின்றனர். இளைய சமுதாயத்தினரிடையே, இந்த நடைமுறை மாறி வருவதை சில நிகழ்வுகளால் அறிந்துகொண்டேன். திரைநட்சத்திரங்களை காட்டிலும் மக்களின் நன்மதிப்பு பெற்ற ஒருவரையே தங்களது ரோல்மாடல்களாக ஏற்க முன்வந்துள்ளனர். அதனடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, எண்ணற்ற இளைய தலைமுறையினரின் ரோல் மாடலாக வியாபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்