போருக்கு இந்தியா தயார் - தளபதி தனோவா

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நடந்த நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 

தற்போதைய சூழ்நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போருக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. முழு அளவிலான போரை எதிர்கொள்ள நிறைய விமானப்படைகள் தேவைப்படுகிறது. இதனை வைத்து, போரை எதிர்கொள்ள முடியாது என கருதக்கூடாது. இதற்கு மாற்று திட்டம் உள்ளது. வரும் 2032க்குள் இந்திய விமானப்படை 42 படைகளை பெறும்.டோக்லாமின் சம்பி பள்ளத்தாக்கில், சீன படைகள் முற்றிலும் திரும்ப பெறப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.பாகிஸ்தான், சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தலையும், ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு எதிரான போரையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக விமானப்படை தளபதி தனோவா கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்