டாட்டூ மோகத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை.!
கனடாவை சேர்ந்தவர் 24 வயதுடைய காட் காலிங்கர் என்ற பெண் . இவர் சமீபத்தில் கண்ணில் டாட்டூ போட்டுகொண்டார்.. இதனையடுத்து டாட்டூ போட்டுகொண்டதால் அவரது கண் தீடிரென ஊதா நிறமாக மாறியது.கண்ணில் இருந்து ஊதா நிறமாகநீர் வடிய ஆரம்பித்தது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பரிசோதனை செய்தார். பரிசோதனையில் அவருடைய கண் பெரியதாக திறக்க முடியாமல் பார்வை போய்விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
டாட்டூவில் கலந்துள்ள மையானது கண் கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வை இழப்பு நேரிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சணக்கில் பணம் செலவு செய்தும் எந்த வித பலனும் அளிக்கவில்லை. இறுதியாக அந்த பெண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும் இது போன்று மக்கள் செய்ய வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டார்.

Comments
Post a Comment